இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும் வாசம் செய்பவரே
உம்மை நம்பிவந்த யாவருக்கும் என்றும் நன்மைகள் செய்பவரே (2)
உம்மை என்றென்றுமே என்றென்றுமே பாடி புகழ்ந்திடுவோம்
உம்மை எந்நாளுமே எந்நாளுமே ஆராதனை செய்குவோம் (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே (2)
ஆண்டாண்டு காலங்கலாய் உம் கிருபையால் காத்துவந்தீர்
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமாய் வந்தீர் (2)
-- உம்மை என்றென்றுமே
மாறாவின் கசப்புகளை நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர்
எங்கள் உள்ளத்தில் ஜுவ நதி பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர் (2)
-- உம்மை என்றென்றுமே
வாக்களித்த தேசங்களை நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம்
இந்த பூமியின் இறுதிவரை இயேசு நாமத்தை உயத்திடுவோம் (2)
-- உம்மை என்றென்றுமே
No comments:
Post a Comment