Friday, November 4, 2016

ஆதி திருவார்த்தை திவ்ய|Aadhi Thiru Vaarthai

ஆதி திருவார்த்தை திவ்ய
அற்புத பாலனாக பிறந்தார்
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரை யீடேற்றிட

    மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனு குமாரன் வேஷமாய்
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
    மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்

    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

ஆதாம் ஓதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்

அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்பரன் மெய்பரன் தற்பரனார்.

No comments:

Post a Comment