பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..
எல்லையில்லா ஞானபரன் -வெல்ல
மலையோரம் புல்லணையிலே
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம்....நேரம்....
வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ -ஆன பழங்
கந்தை என்ன பாடோ...பாடோ...
அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி...மோடி...
ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு -அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு...கண்டு....
No comments:
Post a Comment