Thursday, November 3, 2016

உயரமும் உன்னதமுமான | Uyaramum Unnathamum Aana


உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்


        சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
        பரிசுத்தர் பரிசுத்தரே


ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்

No comments:

Post a Comment